டெல்டா மாவட்ட நீர்நிலைகளில் தூர்வார வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

Priya
11 Views
2 Min Read

மேட்​டூர் அணை​யில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்​ணீர் திறப்​ப​தற்கு முன்​பாக டெல்டா மாவட்​டங்​களில் உள்ள அனைத்து நீர்​நிலைகளில் தூர்வார வேண்​டும் என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அதி​முக ஆட்​சி​யில், ஒவ்​வொரு ஆண்​டும் மேட்​டூர் அணை​யில் இருந்து பாசனத்​துக்கு தண்​ணீர் திறந்​து​விடும் ஜூன் 12-ம் தேதிக்கு முன்​பே, டெல்டா மாவட்​டங்​கள் முழு​வதும் உள்ள பாசன வாய்க்​கால்​கள், ஆறுகள் போன்ற நீர்​நிலைகள் அனைத்​தும் தூர்வாரப்​பட்டு பாசனத்​துக்கு தண்​ணீர் தங்கு தடை​யின்றி சென்​றது.

மழைக் காலங்​களில் நீர் நிலைகளில் தடுப்​பின்றி வெள்ள நீர் வேக​மாக வடிய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. குறிப்​பாக, 2011-ம் ஆண்டு கால​கட்​டத்​தில் டெல்டா மாவட்​டங்​களில் ‘நெய்​வேலி காட்​டா​ மணக்​கு’ என்ற செடி நீர் நிலைகள் முழு​வதும் ஆக்​கிரமித்து பாசனத்​துக்கு, கடைமடை பகு​தி​களுக்கு தண்​ணீர் செல்​வ​தில் பெரிதும் பாதிப்பை ஏற்​படுத்​தி​யது.

அவற்றை முழு​மை​யாக அகற்​றி, இன்​று​வரை நெய்​வேலி காட்​டா​மணக்கு என்ற செடி டெல்டா மாவட்​டங்​களில் எங்​கும் இல்லை என்ற நிலையை உரு​வாக்​கினோம்.

டெல்டா மாவட்​டங்​களில் தூர்வாரும் பணி​யை​யும், ஆறுகளின் கட்​டமைப்​புப் பணி​களை​யும், அந்​தந்த பகு​தி​களில் உள்ள பதிவு பெற்ற விவ​சாய சங்​கங்​களுக்கே வழங்​கி, விவ​சா​யிகளே தூர்வாரும் பணியை மேற்​கொண்​ட​தால், இப்​பணி 100 சதவீதம் முறை​யாக நடை​பெற்றது.

கடந்த ஆட்​சி​யில் டெல்டா மாவட்​டங்​களில் முறை​யாக தூர்வாரப்​பட​வில்​லை. இந்த ஆண்​டும் தேர்​தல் நடை​பெற்​றுக்கொண்​டிருக்​கும்​போதே, டெல்டா மாவட்​டங்​களில் ‘சி’ மற்​றும் ‘டி’ வாய்க்​கால்​கள் அவசர கோலத்​தில் தூர்வாரப்​பட்​டன.

இதனால் ஜூன் மாதம் மேட்​டூர் அணை​யில் திறந்​து​விடப்​படும் தண்​ணீர் முழு​மை​யாக டெல்டா மாவட்​டங்​களின் கடைமடை பகு​தி​களில் சென்​றடை​யாமல் விவ​சாயப் பணி​கள் பாதிக்​கும் சூழ்​நிலை ஏற்​பட்​டுள்​ளது.

எனவே, புதி​தாகப் பொறுப்​பேற்​றுள்ள அரசு, டெல்டா மாவட்​டங்​களில் அனைத்து நீர் நிலைகளி​லும் தேங்​கிக் கிடக்​கும் ஆகா​யத் தாமரையை அகற்​றி, இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்​டூர் அணை​யில் இருந்து திறந்​து​விடப்​படும் தண்​ணீர் கடைமடை பகு​திவரை முழு​மை​யாகச் சென்​றடைவதை உறு​தி செய்​ய வேண்​டும்​. இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply