இந்தியப் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதித்தது அமெரிக்கா

Priya
10 Views
1 Min Read

கடந்த பிப்​ர​வரி மாதம் அமெரிக்​கா​வால் அறிவிக்கப்பட்ட 10 சதவீத தற்​காலிக உலகளா​விய இறக்​குமதி வரியின் காலக்​கெடு இந்த வாரத்​துடன் நிறைவடைந்​தது. அதை ஈடு​செய்​யும் வகை​யில் இந்தியாவுக்கு கூடுதலாக 10 சதவீதவரியை அமெரிக்கா விதித்துள்ளது.

கட்​டா​யத் தொழிலா​ளர் மூலம் உற்​பத்தி செய்​யப்​படும் பொருட்களின் இறக்​கும​தி​யைத் தடை செய்​யத் தவறியதற்​காக​வும், கட்​டுப்​பாடு​களைச் சரிவர அமல்​படுத்​தாத தற்​காக​வும் உலகம் முழு​வதும் 60 நாடு​கள் மீது அமெரிக்கா வரி​களை விதித்​துள்​ளது.

தற்​போதைய 10 சதவீத வரி விதிப்​பின் மூலம் பாகிஸ்​தான், இலங்​கை, வங்​கதேசம் ஆகிய அண்டை நாடு​களுக்கு இணை​யான நிலைக்கு இந்​தியா தள்​ளப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து அமெரிக்க வர்த்​தகப் பிர​தி​நிதி ஜெமிசன் கிரீர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​தாவது: மனித உரிமை மீறலாக​வும், சர்​வ​தேச வர்த்​தகச் சந்​தையை சீர்​குலைக்​கும் நடை​முறை​யாக​வும் இருக்​கும் கட்​டா​யத் தொழிலா​ளர் முறையைச் சரிசெய்​வதற்​கு இந்த வரி விதிப்பு நடவடிக்கை தொடக்​கப் புள்​ளி​யாக அமை​யும்.

கட்​டா​யத் தொழிலா​ளர் மூலம் தயாரிக்​கப்​படும் பொருட்​களின் இறக்​கும​திக்கு விரை​வாகத் தடை விதித்​துச் சட்​டங்​களை இயற்​றிய வர்த்​தகக் கூட்டு நாடு​களின் நடவடிக்கை ஊக்​கமளிக்​கிறது. அச்​சட்​டங்​கள் முறை​யாக அமல்​படுத்​தப்​படு​வதை உறுதி செய்​வதை எதிர்​நோக்​கி​யுள்​ளோம். இவ்​வாறு கிரீர்​ கூறி​னார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply