தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் நிறைவேற்றம்: அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வர் விஜய் நன்றி

Priya
759 Views
1 Min Read

‘தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழ் ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை, பண்பாடு, நாகரிகம். அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு.

மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம், தமிழ்த்தாய்க்குச் செலுத்தப்படும் உயரிய மரியாதையாகும். இத்தீர்மானம் நிறைவேற்றிய இந்நன்னாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும். தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply