பேரவையை திரையரங்கமாக மாற்றாமல் மக்கள் அரங்கமாக நடத்த வேண்டும்: முதல்வருக்கு தமிழிசை வேண்டுகோள்

Priya
20 Views
2 Min Read

சட்டப்பேரவையை திரையரங்​க​மாக மாற்​றாமல், மக்​கள் அரங்​க​மாக நடத்த வேண்​டும் என முதல்​வருக்கு தமிழிசை வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

சென்னை தி.நகரில் உள்ள கமலால​யத்​தில் தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: ஜனநாயகம், கருத்து சுதந்​திரம் குறித்​துப் பேச காங்​கிரஸ் கட்​சிக்கு எந்த உரிமை​யும் கிடை​யாது.

இந்​திய அளவில் 84 முறை ஆளுநர் ஆட்​சியை அமல்​படுத்​திய கட்சி காங்​கிரஸ். தமிழகத்​திலேயே திமுக, அதி​முக ஆட்​சிகள் கலைக்​கப்​பட்ட வரலாறு உண்​டு. தற்​போது வேலை​வாய்ப்பு குறித்து பேசும் காங்​கிரஸ், உண்​மை​களை மறைத்து நாடக​மாடு​கிறது.

பிரதமரின் வேலை​வாய்ப்​புத் திட்​டம் மூலம் தமிழகத்​தில் கடந்த ஒரு வாரத்​தில் மட்​டும் 99,303 பேர் வேலை​வாய்ப்பு பெற்​றுள்​ளனர். இத்​திட்​டத்​தில் வேலை​வாய்ப்பு பெற்​றவர்​களுக்கு 6 மாதங்​களுக்​குப் பிறகு ரூ.7,500, மீண்​டும் 6 மாதம் கழித்து ரூ.7,500 என மொத்​தம் ரூ.15 ஆயிரம் உதவித் தொகை​யாக வழங்​கப்​படு​கிறது. வேலை வழங்​குபவர்​களுக்​கு, ஒரு பணி​யாள​ருக்​காக மாதம் ரூ.3 ஆயிரம் பி.எஃப். தொகை​யாக வழங்​கப்​படு​கிறது.

தமிழகத்​தில் வேலை​வாய்ப்பு உதவித் தொகை​யாக ரூ.56.74 கோடி​யும், நிறு​வனங்​களுக்கு ரூ.187.67 கோடி​யும் பிரதமர் மோடி​யால் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த ஒரு பரு​வத்​தில் மட்​டும் நாடு முழு​வதும் 15 லட்​சம் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.

கர்​நாட​கா​வில் காங்​கிரஸ் ஆட்​சி​யில் உள்​ளது. தமிழகத்​தில் அவர்​கள் தவெக கூட்​டணி அரசில் அங்​கம் வகிக்​கின்​றனர். ஆனால், தமிழகத்​துக்கு உரிய காவிரி நீர் கிடைக்​க​வில்​லை. இதற்​காக காங்​கிரஸ் குரல் கொடுக்​காமல் இரட்டை வேடம் போடு​கிறது. இதை மக்​கள் நம்ப மாட்​டார்​கள்.

மத்​திய அரசுடன் இணக்​க​மாக இருப்​போம் என்று தமிழக முதல்​வர் விஜய் கூறி​யிருப்​பது ஆரோக்​கிய​மான மனநிலை. இது வரவேற்​கத்​தக்​கது. கோயில் நிதி கோயிலுக்கே பயன்​படுத்​தப்​படும் என்று அரசு அறி​வித்​ததும் நல்ல விஷ​யம்.

அதே நேரம், திருப்​பரங்​குன்​றத்​தில் இந்​துக்​களின் உரிமை பறிக்​கப்​படு​வது கண்​டிக்​கத்​தக்​கது. அரசு திட்​டங்​கள் அனைத்​தும் திட்​ட​மிடப்​ப​டா​மல் மேம்​போக்​காக நடக்​கின்​றன. இதில் அரசு கவனம் செலுத்த வேண்​டும். சட்​டப்​பேர​வையை திரையரங்​க​மாக மாற்​றாமல், மக்​கள் அரங்​க​மாக நடத்​த வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply