அரசு மருத்துவமனைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

Priya
724 Views
2 Min Read

அரசு மருத்​து​வ​மனை​களில் செவிலியர்​களின் பற்​றாக்​குறை இருப்​ப​தால் 4 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட செவிலியர் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்று சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் தெரி​வித்​தார்.

சென்னை மருத்​துவ கல்​லூரி​யில் 192-வது மருத்​துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்வு நேற்று நடந்​தது. இதில் பங்​கேற்ற சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ், 2026- 27-ம் கல்​வி​யாண்டு இளநிலை மருத்​துவப் படிப்​பு​களில் சேர்ந்​துள்ள மாணவர்​களுக்கு வெள்ளை அங்கி மற்​றும் ஸ்டெதஸ்​கோப் அணி​வித்து வரவேற்​றார்.

தொடர்ந்​து, ரூ.23.40 லட்​சத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள மருத்​துவக் கல்வி சார்ந்த வீடியோ உரு​வாக்க அரங்​கத்​தை திறந்து வைத்த அமைச்​சர், மாணாக்கர்​களிடையே தொழில் முனைவு திறனை ஊக்​குவிக்​கும் நோக்​கில் மருத்​துவ கல்​லூரி​யில் புதிய உரை​யாடல் தொடர் நிகழ்ச்​சியை அறி​முகப்​படுத்​தி​னார்.

சென்னை மருத்​துவக் கல்​லூரி​யின் சிறப்பு மிக்க நிகழ்​வான ஆண்டு தோறும் நடை​பெறும் முன்​னாள் மாணவர் சந்​திப்பு நிகழ்வு குறித்த முன்​னோட்ட விளம்பர பதாகையை அமைச்​சர் வெளி​யிட்​டார்.

முன்​ன​தாக மருத்​துவ நெறி​முறை​கள் சார்ந்த உறுதி மொழியை அமைச்​சர் முன்​னிலை​யில் மருத்​துவ மாணவர்​கள் ஏற்றுக் கொண்​டனர். சுகா​தா​ரத்​துறை செயலர் தாரேஸ் அகமது, மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் (பொ) லோக​நாயகி, ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை மற்​றும் சென்னை மருத்​துவக் கல்​லூரி டீன் சாந்​தா​ராமன், துணை டீன் வித்​யா, மருத்​து​வ​மனை கண்​காணிப்​பாளர் (பொ) சுதாகரன், எழும்​பூர் அரசு குழந்​தைகள் மருத்​து​வ​மனை இயக்​குநர் லூக் ரவி செல்​லையா உள்​ளிட்​டோர் நிகழ்​வில் பங்​கேற்​றனர்.

இந்த நிகழ்​வில் அமைச்​சர் அருண்​ராஜ் பேசுகை​யில், “நீங்​கள் அனை​வரும் நீட் தேர்​வில் கடின​மாக படித்​து, இப்​போது சென்னை மருத்​துவக் கல்​லூரி​யில் இணைந்​திருக்​கிறீர்​கள். கல்​லூரி நாட்​களில் மிக​வும் சந்​தோஷ​மாக இருக்க வேண்​டும்.

மருத்​துவப் படிப்பை முடித்​து​விட்டு மருத்​து​வ​ராக செல்​லும் நீங்​கள் முதலில் பொறுப்​புள்ள குடிமக​னாக இருக்க வேண்​டும். அப்​படி இருந்​தால் தான் உங்​களு​டைய உரிமை​கள், கடமை​கள் என்ன என்​பதை தெரிந்து கொண்​டு, இந்த சமூகத்​துக்கு சேவை​யாற்ற முடி​யும். இது​வரை நமக்கு அறிவை கொடுத்​தது நம்​முடைய புத்​தகங்​கள்.

ஆனால் இனிவரும் காலங்​களில் மருத்​து​வர்​களுக்கு அறிவு என்​பது அனுபவம் தான். அந்த அனுபவம் என்​பது நம்​முடைய அரசு மருத்​து​வ​மனைக்கு வரும் நோயாளி​கள் தான். நோயாளி​களின் வலிகளை புரிந்​து, அவர்​களை மதிக்க வேண்​டும்” என்​றார்.

அமைச்​சர் அருண்​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “காய்ச்​சல் பரவும் காலம் என்​ப​தால், பொது இடங்​களுக்கு செல்​லும் போது முகக்​கவசம் பயன்​படுத்த வேண்​டும். டெங்கு காய்ச்​சலை கட்​டுப்​படுத்த கொசு ஒழிப்பு பணி தீவிர​மாக நடந்து வரு​கிறது.

இந்த ஆண்​டில் இது​வரை 15,933 பேர் டெங்​கு​வால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். டெங்கு பாதிப்​புக்கு அரசு மருத்​து​வ​மனை​களில் முறை​யான சிகிச்சை அளிக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. சென்னை மேயர் மற்​றும் உள்​ளாட்சி அமைப்​பு​கள், இந்த அரசுக்கு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும்.

புதிய தலைமைச் செயல​கம் கட்​டு​வதற்கு மீனவர்​களிடம் முறை​யான பேச்​சு​வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்​கப்​படும். செவிலியர்​கள் பற்​றாக்​குறை இருப்​ப​தால், 4 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட செவிலியர் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. செவிலியர்​களின்​ கோரிக்​கை படிப்​படி​யாக நிறைவேற்​றப்​படும்” என்​றார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply