அசாமில் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆக உயர்வு

Priya
584 Views
1 Min Read

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.

இதற்​கிடையே, பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்​கு, முதற்​கட்​ட​மாக, தலா ரூ.75 ஆயிரம் இடைக்​கால நிவ​ராணத் தொகையை மாநில முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வழங்​கி​னார். அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரண​மாக, பல்​வேறு மாவட்​டங்​களில் வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. இதில், சிவசாகர் என்ற மாவட்​டம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த மாவட்​டத்​தில் கடந்த ஞாயிறன்று வெள்​ளத்​தில் சிக்கி 3 பேர் உயி​ரிழந்​தனர். இதையடுத்​து, மாநிலம் முழு​வதும் வெள்​ளப் பெருக்​கில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 85 ஆக உயர்ந்​துள்​ளது. எனினும், வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட மக்​களின் எண்​ணிக்கை 1.80 லட்​சத்​தில் இருந்து 1.36 லட்​ச​மாக குறைந்துள்ளது.

வெள்​ளத்​தால் கடுமை​யாக பாதிக்​கப்​பட்ட சிவ​சாகர், சராய்தியோ, ஜோர்​ஹாட் மற்​றும் கோல​காட் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாதிக்​கப்​பட்ட வீடு​களுக்கு முதற்​கட்​ட​மாக தலா ரூ.15 ஆயிரம் நிவாரண தொகை வழங்​கப்​படு​கிறது. பிற உதவி​கள் உட்பட மொத்​தம் ரூ.75 ஆயிரம் நிவாரணத் தொகை​யாக ஒரு குடும்​பத்​துக்கு வழங்​கப்​படும்.

முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்​மா, வெள்​ளத்​தால் கடுமை​யாக பாதிக்​கப்​பட்ட மாவட்​டங்​களில் ஆய்வு மேற்​கொண்டு வரும் நிலை​யில், திப்​ரூகரில் இந்த நிவாரண உதவி​களை வழங்​கி​னார். சிவ​சாகர் மாவட்​டத்​தில் 55,000-க்​கும் மேற்​பட்​டோர் வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். அடுத்​த​தாக, சராய்​தியோ மாவட்​டத்​தில் சுமார் 40,000 பேரும், ஜோர்​ஹாட் மாவட்​டத்​தில் 22,000-க்​கும் மேற்பட்​டோரும் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

மாநில முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா சிவ​சாகர் மாவட்டத்துக்குச் சென்று நிவாரணம் மற்​றும் மறு​வாழ்வு பணிகளை ஆய்வு செய்ய உள்​ளார். அத்​துடன், பாதிக்​கப்​பட்ட மக்களை சந்​தித்து பேச​வும் திட்​ட​மிட்​டுள்​ளார். மாநில அரசு 5 மாவட்​டங்​களில் 54 நிவாரண முகாம்​களை அமைத்​துள்​ளது. அதில், 13,771 பேர் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். இதற்​கிடையே, 15,422 ஹெக்​டேர் விளைநிலங்​கள் நீரில் மூழ்​கி​யுள்​ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply