மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஆட்சிக்கு முக்கிய வழிக்காட்டியாக திட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சி சக்கரத்தை திமுக நடத்தினாலும், எங்களின் முக்கிய வழிகாட்டி மாநிலத் திட்டக்குழு தான். திமுக ஆட்சியின் நிறை, குறைகளை எடுத்துச்சொல்வது மாநிலத் திட்டக்குழு. மாநில திட்டக்குழு அறிக்கைதான் திமுக அரசின் மதிப்பெண் சான்றிதழ்.

நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்புகள் கூடியுள்ளதாக அறிக்கையில் தெரிய வந்துள்ளது. தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகியவை ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். சமூகரீதியிலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும். காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதைவிட மகிழ்ச்சியான செய்தி எதுவும் இருக்க முடியாது.

மகளிர் உரிமைத்தொகை மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது. கட்டணமில்லா விடியல் பேருந்து மூலம் பெண்களின் சமூக வாய்ப்பளிப்பு அதிகரித்துள்ளது.

அரசின் ஒவ்வொரு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சியை கண்டுள்ளனர். மாநில திட்டக்குழுவின் மூலம் நான் எதிர்பார்ப்பது புதிய திட்டங்களை தான். கவனம் பெறாத துறைகளுக்கான புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here