சிலருக்கு கார் அல்லது பஸ்சில் பயணம் செய்யும் போது வாந்தி, குமட்டல், மயக்கம் ஏற்படும். இதனை தடுக்கும் சில எளிய வழிமுறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
சிலருக்கு பயணம் என்பது பிரச்சினை நிறைந்ததாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக பஸ் அல்லது காரில் பயணம் செய்பவர்களுக்கு. ஏனெனில், ஏனெனில் அவர்கள் கார் அல்லது பஸ்ஸில் பயணம் செய்யும்போது வாந்தி, குமட்டல் எடுக்க தொடங்கும்.
கார் அல்லது பேருந்தில் பயணம் செய்யும்போது ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனை மோஷன் சிக்னஸ் எனப்படும். மேலும், இதற்கு சில முக்கிய காரணங்களும் உண்டு.
பயணத்தின்போது உடலில் ஏற்படும் சமநிலை பாதிப்பால் அவர்களுக்கு வாந்தி, தலைச்சுற்றல், குமட்டல், மயக்கம் வரும். சிலருக்கு, உடலில் பித்தநீர் அதிகம் இருக்கும் போது இந்த பிரச்சினைகள் வரும்.
இன்னும் சிலருக்கோ, உணவு ஏதும் சாப்பிடாமல், வெறும் வயிற்றில் பயணம் செய்யும் போது தலைசுற்றல், மயக்கம், வாந்தி, குமட்டல் ஆகியவை ஏற்படும். எனவே, பயணம் செய்யும்போது, மிதமான அளவில் உணவு எடுத்துக்கொள்ளுங்கள்.
சிலருக்கு கார் அல்லது பேருந்தில் பயணம் செய்யும்போது வாந்தி, குமட்டல் எடுக்க தொடங்கும். ஆனால் ரயிலில் பயணம் செய்யும்போது இதுபோன்ற பிரச்சனைகள் அவர்களுக்கு வராது.
எனவே, இந்த பிரச்சினைகள் வராமல் இருக்க பயணம் செய்வதற்கு முன்பு இஞ்சி, கொத்தமல்லி, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை நன்கு அரைத்து, மோரில் கலந்து குடித்தால் வாந்தி, குமட்டல் வராது அல்லது உலர்ந்த நார்த்தங்காய் துண்டை வாயில் போட்டுக்கொள்ளுங்கள். இப்படி செய்தால் குமட்டல் வராது.