“விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தஞ்சையில் தக்க பாடம் புகட்டுவோம்” – உதயநிதி

Priya
501 Views
1 Min Read

“தமிழக விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்யும் தவெக அரசைக் கண்டித்து, தஞ்சையில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம்” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி, மேகேதாட்டு பிரச்சினையை கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 அன்று தண்ணீர் திறக்காதது, காவிரி பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட மறுப்பது, கர்நாடக முதல்வரை சந்திக்கப் போவதாக அதிகாரபூர்வமற்ற தகவல்களை உலவவிட்டு ஆழம் பார்ப்பது…

இப்படி தமிழக விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்யும் சோஃபா மாடல் தவெக அரசைக் கண்டித்து, முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில், திமுக சார்பில் தஞ்சை மாநகரில் வரும் ஆகஸ்ட் 3 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம். தஞ்சையில் கூடுவோம்… விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், மேகேதாட்டு அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு, மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு, அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாமல் காலம் தாழ்த்தல் என விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத தவெக அரசு.

தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 3-ம் தேதி தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி தவெக அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply