சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் விலக்கு கோரி மசோதா நிறைவேற்ற வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

Priya
763 Views
2 Min Read

தமிழகத்​துக்கு நீட் விலக்கு கோரி வரும் சட்டப்​பேரவை கூட்​டத்​ தொடரில் சட்ட மசோதா நிறைவேற்ற வேண்​டும் என திரு​மாவளவன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

மத்​திய அரசு நீட் தேர்வை முற்​றாக கைவிட வேண்​டும், தமிழக அரசு நீட் விலக்கு சட்​டத்தை இயற்ற வேண்​டும் என்ற கோரிக்​கைகளை வலி​யுறுத்தி விசிக சார்​பில் நேற்று சென்​னை​யில் ஆர்ப்​பட்​டம் நடை​பெற்​றது.

விசிக தலை​வர் திரு​மாவளவன் தலை​மை​யில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் சிந்​தனை செல்​வன், பொருளாளர் எஸ்​.எஸ்​.​பாலாஜி, கட்​டுமன்​னார்​கோ​வில் எம்​எல்ஏ ஜோதி மற்​றும் விசிக​வினர் பலர் கலந்​து ​கொண்​டனர்.

ஆர்ப்​பாட்​டத்​தில் திரு​மாவளவன் பேசி​ய​தாவது: டெல்லி​யில் கடந்த சில நாட்​களுக்கு முன் பெரும் கொந்​தளிப்பு ஏற்​பட்​டது. டெல்​லியோடு இந்த போராட்​டம் நிற்​காமல் இந்​தியா முழு​வதும் ஆங்​காங்கே மும்​பை​யிலும் சென்​னை​யிலும் கொல்​கத்​தா​விலும் ஹைத​ரா​பா​தி​லும் ஆயிரக்​கணக்​கில் பொது​மக்​கள் பங்​கேற்​கும் போராட்​ட​மாகவே பரிணமித்​தது.

இதனிடையே சிஜேபி கட்​சி​யினர் முன்​வைத்த கோரிக்​கையை ஏற்று கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கி​னார். இது பாஜக ஆட்​சி​யின் வீழ்ச்​சி​யின் தொடக்​கப்​புள்​ளி, யாராலும் அசைத்துக் கூட பார்க்க முடி​யாது என்று வழக்​கம்​போல செயல்​பட்டு வந்த பாஜகவினர் அசைக்​கப்​பட்டு விட்​டார்​கள். அசைந்து கொடுத்து விட்​டார்​கள் இது ஒரு புதிய வரலாறு.

காங்​கிரஸ் மூல​மாகத்​தான் பாஜக​வுக்கு மக்​கள் தண்​டனை வழங்​கு​வார்​கள் என்று இல்லை சிஜேபி மூல​மாக தண்​டனை வழங்க முடி​யும் என காண்​பித்​துள்​ளனர். அரசி​யல் கட்​சி​யிலும், பொது வாழ்க்​கை​யில் உள்ள ஒவ்​வொரு​வருக்​கும் இது ஒரு படிப்​பினை.

தமிழகத்​தி​லும் திமுகவை அதி​முக​வும், அதி​முகவை திமுக தான் வீழ்த்த முடி​யும் என்ற நிலையை தமிழக வெற்​றிக்​கழகம் மாற்​றி​யுள்​ளது.

தொடக்​கம் முதலே நம்​முடைய கோரிக்கை நீட் கூடாது, தமிழகத்​தில் மட்​டுமல்ல இந்​தியா முழு​வதும் நீட் தேர்வு கூடாது என்​பதுதான். மேலும் இந்த பிரச்​சினை​களுக்கு நிரந்தர தீர்வு என்​பது கல்​வியை மாநில பட்​டியலுக்கு கொண்டு வரு​வது தான்.

தமிழக அரசு வரும் சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடரில் நீட் தேர்​வில் இருந்து தமிழகத்​துக்கு விலக்கு அளிக்க கோரி சட்ட மசோதா நிறைவேற்ற வேண்​டும். மேலும் தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்​டும்​ என்​ப​தே எங்​களின்​ கோரிக்​கை. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply