“இசை எனக்குள் அதுவாகவே வந்தது” – இளையராஜா நெகிழ்ச்சி

Priya
766 Views
2 Min Read

மாரி செல்​வ​ராஜ் இயக்​கும் ‘மஞ்​சணத்​தி’ படத்​தில் கதிர், பிரி​யங்கா மோகன், கயாடு லோஹர், பூர்​ணிமா ரவி, விது, விக்​னேஷ், ராகுல் மற்​றும் ராகவி உள்​ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​ராஜ் வழங்​கும் இந்​தப்​படத்தை ஃபார்​சூன் என்​டர்​டெ​யின்​மென்ட் நிறு​வனத்​தின் சுஷாந்த் பிர​சாத் இணைந்து தயாரிக்​கிறார். இளை​ய​ராஜா இசை அமைக்​கிறார். தற்​போது இதன் படப்​பிடிப்பு தொடங்​கி​யுள்​ளது.

முதல் காட்​சி​யைத் தொடங்கி வைத்து இளை​ய​ராஜா பேசும்​போது, “நான் காடுமேடு​களி​லும் முள்​ளுக்​காடு​களி​லும் வளர்ந்​தவன். அங்​கிருந்து எப்​படியோ இசையைக் கற்​றுக்​கொண்டு முன்​னேறினேன். இசையைச் சொல்​லித்தர எனக்கு அரு​கில் யாரும் இல்​லை. ஒரு தாகத்​தோடு நானே இசையைக் கற்​றுக் கொண்​டேன். உலகிலுள்ள மிகப்​பெரிய மேதைகளெல்​லாம் சிறு வயதிலேயே பியானோவைப் பார்த்​து, கற்​றுக்​கொண்டு வளர்ந்​தவர்​கள்.

ஆனால் நான் பியானோவைப் பார்ப்​ப​தற்கே 27 வயதாகி​விட்​டது. அதனால் நான் எல்​லோரை​யும் விட உயர்ந்​தவன் என்று சொல்ல மாட்​டேன். ஆனால் இசை எனக்​குள் அது​வாகவே வந்​தது. எனக்​குள் ஓடும் இசை​யின் ஜீவன் இருக்​கிறதே, அது இது​வரை யாருக்​கும் வந்​த​தில்​லை; இனி​யும் வரப்​போவ​தில்​லை.

இதை நான் கர்​வத்​தோடு சொல்​கிறேன் என்று நினைத்​துக் கொள்ளலாம். ஆனால் கர்​வத்​தோடு​தான் இதைச் சொல்ல வேண்​டும். ஜெர்​மனி​யில் இருந்த ஒரு தமிழ் கர்ப்​பிணிப் பெண்​ணுக்கு வயிற்​றில் இருந்த குழந்​தை​யின் அசைவு​கள் நின்​று​விட்​ட​தால், உடனடி​யாக அறுவை சிகிச்சை செய்ய மருத்​து​வர்​கள் அறி​வுறுத்​தி​யுள்​ளனர். அப்​போது என் இசையைக் கேட்​கச் செய்​துள்​ளனர்.

2 நாட்​கள் தாயை கண்​காணிப்​பில் வைத்​திருந்த நிலை​யில், 3-வது நாள் அறுவை சிகிச்​சைக்கு முன்பு பரிசோ​தித்​த​போது குழந்​தைக்கு உயிர் வந்​திருப்​பது தெரிய​வந்​தது. இது உண்​மை​யாக நடந்த சம்​பவம். அதற்​காக எனக்கு எந்​தப் பெரு​மை​யும் இல்​லை. இசையமைப்​பது என் வேலை.

கடவுள் எனக்கு அந்த சக்​தி​யைக் கொடுத்​திருக்கிறார்; நான் அதைச் செய்​கிறேன். என் வேலை என்​னவோ, அது​தான் சரஸ்​வதி எனக்​குக்​ கொடுத்​தது. அப்​படிப்​பட்​ட இசையை இன்​று மாரி செல்​வ​ராஜுடன்​ இணைந்​து உரு​வாக்​கு​கிறேன்​” என்​றார்​. படக்​குழுவினர் கலந்துகொண்டனர். 

Share This Article
Leave a Comment

Leave a Reply