கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, தவெக கட்சியின் சார்பில் ஒரு மாத காலம் எவ்வித அரசியல் செயல்பாடுகளும் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தவெக வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று ( நவம்பர் 5) நடைபெற்று வருகிறது.
இந்த பொதுக்குழுவில் முதலாவதாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது.
இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளராக தவெக தலைவர் விஜயை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் 2026 தேர்தல் தொடர்பான கூட்டணி முடிவுகளை எடுக்க முழு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றம்.


