22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (செப்.1) பவுனுக்கு ரூ.120 என்று சற்றே உயர்ந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்க விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,080 என குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய விலை விவரம்
இந்தச் சூழலில் சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,385-க்கும் விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,15,080-க்கும் விற்பனையாகிறது.
24 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,693-க்கு விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,155-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.255-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.

