கால்பந்தில் இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கக்கூடும்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு!

Priya
789 Views
1 Min Read

போர்ச்சுக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தனது நீண்ட கால தோழியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸுடன் திருமணம் முடிந்த கையோடு, அளித்த பேட்டியில் 2026-27 கால்பந்து சீசன் தனது தொழில்முறை வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கக்கூடும் என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

விளையாட்டை விட்டு விலகுவதற்கு முன்பு மகத்தான LEGACY-யை விட்டுச்செல்ல விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகள் இணைந்து நடத்திய 2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் தனது 6வது உலகக்கோப்பையில் பங்கேற்ற பிறகு இந்த முக்கிய முடிவை நோக்கி நகர்ந்துள்ளார்.

தற்போது சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, கால்பந்திலிருந்து ஓய்வு பெற்ற அதிக நேரத்தை தன் குடும்பத்தினருடன் செலவிடவும், உலகம் முழுவதும் பயணம் செய்வதுடன் தனக்கு மிகவும் பிடித்தமான ‘பேடல்’ விளையாட்டை விளையாடவும் விரும்புவதாகக் கூறியுள்ளார்.

சமீபத்தில்தான் தனது காதலி ஜார்ஜினா உடனான பிறகு திருமணம் செய்துகொண்ட ரொனால்டோ, கால்பந்து வாழ்க்கைக்குப் பிறகு தனது கடின உழைப்பின் பலனை குடும்பத்துடன் முழுமையாக அனுபவிக்கப் போவதாகவும் இந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply