Montha Cyclone: இன்றிரவு தீவிர புயலாக கரையை கடக்கும்-தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் !..

தீவிர புயலாக வலுப்பெற்ற மோன்தா தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: கனமழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

prime9logo
135 Views
1 Min Read
Highlights
  • மோன்தா புயல் இன்று மாலை/இரவு ஆந்திராவில் கரையை கடக்கிறது.
  • புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.
  • புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
  • திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

வங்கக்கடலில் நிலவியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  மோன்தா புயலாக வலுப்பெற்றது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (28-10-2025 )  தீவிர புயலாக மாறியுள்ளது. மோன்தா புயல், இன்று  மாலை- இரவு நேரத்தில் காக்கிநாடா மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் நேற்றைய அறிக்கையின் படி,

இந்த புயலின் காரணமாக, திருவள்ளுர் மாவட்டத்தில்  இன்று (28-10-2025 )  கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள்,கன்னியாகுமாரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர்,ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கையின் படி,

வங்கக்கடகில் உருவாகியுள்ள மோன்தா புயல்தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு – வடமேற்கு திசையில் 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மோன்தா புயல், ஆந்திராவின்  மசூலிப்பட்டினம் -கலிங்கப்பட்டினம் மற்றும் காக்கிநாடா  இடையே இன்று  மாலை- இரவு நேரத்தில் கரையை கடக்கும்.புயல் கரையை  கடக்கும் நேரத்தில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

ராணிப்பேட்டை,சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply