தமிழக, புதுவை மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!- தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்.

Surya
By
Surya
Surya is a passionate Tamil news journalist committed to delivering timely, accurate, and people-focused stories. With expertise across politics, social issues, cinema, and public affairs, he...
75 Views
1 Min Read

இலங்கை கடற்படையால்  கைது செய்யப்பட்டுள்ள  தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த  35   மீனவர்களை உடனடியாக விடுவிக்க  ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை வேண்டும் என  தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

” தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது.

கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும்.

ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும். இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Surya is a passionate Tamil news journalist committed to delivering timely, accurate, and people-focused stories. With expertise across politics, social issues, cinema, and public affairs, he blends facts with insight to create journalism that informs, engages, and inspires. Known for his clear writing and authentic storytelling, Surya believes in truth-driven, responsible reporting that empowers readers and strengthens public understanding. His mission is to make news accessible, credible, and impactful for every Tamil reader.
Leave a Comment

Leave a Reply