இதற்கெல்லாம் பதில் வருமா ? – ஒன்றிய பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார்

Surya
78 Views
1 Min Read
Highlights
  • எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?- தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்
  • நாட்டின் திட்டங்களுக்கு இந்தியிலும், சமஸ்கிருதத்திலும் மட்டும் பெயரிடுவது என்ன மாதிரியான ஆணவம் என விமர்சனம்
  • கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்காதது மற்றும் தடுப்பது ஏன் என்ற உணர்வுப்பூர்வமான கேள்விகள்
  • எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து குழப்பம் விளைவிப்பதன் நோக்கம் குறித்து கேள்விகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் தள  பதிவில்,

மாண்புமிகு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்:


ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, #WashingMachine-இல் வெளுப்பது எப்படி?

நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?

ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?

பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை #SIR ஆதரிப்பது ஏன்?

இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்?

கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?

இதற்கெல்லாம் பதில் வருமா?

இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply