ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று கபடியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கார்த்திகாவை, இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது இல்லத்திற்கே நேரில் சென்று பாராட்டியுள்ளார்.
மேலும் தங்கம் வென்ற கார்த்திகாவை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.5 லட்சமும், கண்ணகி நகர் கபடி குழுவை ரூ.5 லட்சமும் வழங்கினார்.
இன்னும் இதுபோல் வேலியே போடமுடியாதபெறட்டும் வெற்றிகளை கண்ணகி நகர் கார்த்திகாக்கள் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
” சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய U-18 பெண்கள் கபடி அணியின் துணைத் தலைவராக விளையாடிய கார்த்திகா இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித்தந்து இறுதிப் போட்டியில் ஈரான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்த தங்கமகள் கார்த்திகாவையும், இந்த வெற்றிக்கு பக்க பலமாக இருந்த அவரது கண்ணகி நகர் கபடிக்குழுவின் முயற்சியை பாராட்டி கவுரவிப்பதற்காக கார்த்திகாவின் வீட்டுக்கு சென்று இன்று எனது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கொண்டேன். அதோடு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கார்த்திகாவிற்கும் ₹ 5 லட்சமும், அவர்களது கண்ணகி நகர் கபடி குழுவிற்கு ₹ 5 லட்சமும் காசோலைகள் இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களின் நீலம் ஸ்டூடியோஸ் சார்பாகவும், அப்ளாஸ் என்டேர்டைன்மெண்ட் சார்பாகவும மற்றும் பைசன் படக்குழு சார்பாகவும் வழங்கி மகிழ்ந்தேன்..
இன்னும் இது போல் வேலியே போட முடியாத பல வெற்றிகளை கண்ணகி நகர் கார்த்திகாக்கள் பெறட்டும்”! என தெரிவித்துள்ளார்.

