அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு!.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அவர்,
ஜெயலலிதா கைகாட்டிய பணிகளை சிறிதும் சலனம் இல்லாமல் செய்து வந்தேன்
நான் களப்பணியாற்றியதால் தான் எண்ணற்ற பொறுப்புகளை ஜெயலலிதா எனக்கு வழங்கினார்
அதிமுக உடைந்துவிடக்கூடாது என்பதற்காக எனக்கு வந்த 2 வாய்ப்புகளையும் விட்டுக் கொடுத்தேன்
அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் எடுத்த முடிவுகளால் அதிமுக வெற்றி வாய்ப்புகளை இழந்தது
இபிஎஸ் முதலமைச்சராவதற்கான பரிந்துரை கடிதத்தில் கையெழுத்து பெற்று படித்து காட்டியவன் நான்
2024 தேர்தலுக்கு பிறகு 6 பேர் சென்று இபிஎஸ்சை சந்தித்து சில கருத்துகளை கூறினோம்
6 பேர் அல்ல யாருமே தன்னை சந்திக்கவில்லை என கூறினார் இபிஎஸ் – செங்கோட்டையன் என தெரிவித்துள்ளார்.

