“தவறு ஒன்றும் இல்லை…” – விஜய்யின் குட்டிக் கதை குறித்து நிர்மலா சீதாராமன் கருத்து

Priya
51 Views
1 Min Read

“அரசியல் விமர்சனம் சட்டப்பேரவையில் செய்யாமல் வேறு எங்கு செய்ய முடியும்? எதிர்க்கட்சியும் பதில் சொல்லட்டும், ஆளும் கட்சியும் பேசட்டும். அதில் தவறு ஒன்றும் இல்லை” என முதல்வர் விஜய்யின் குட்டிக் கதை குறித்த கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன், கூறும்போது, “மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் என தவெக அரசு சொல்லியுள்ளது மிகவும் வரவேற்கதக்கது. எந்த மாநிலத்துக்கும், மாவட்டத்துக்கும் குறைவாக செய்யுங்கள் என பிரதமர் ஒருபோதும் சொன்னதில்லை.

தமிழகத்துக்கு இதுவரை கொடுக்க வேண்டிய எல்லா நிதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போதும் தமிழகத்துக்கு அனைத்து உதவிகளும், அவர்களுக்கு உரிமையாக கிடைக்க வேண்டிய தொகைகளும் கட்டாயமாக கொடுக்கப்படும்” என்றார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் சொன்ன குட்டிக் கதை விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “அரசியல் விமர்சனம் சட்டப்பேரவையில் செய்யாமல் வேறு எங்கு செய்ய முடியும்? எதிர்க்கட்சியும் பதில் சொல்லட்டும், ஆளும் கட்சியும் பேசட்டும். அதில் தவறு ஒன்றும் இல்லை” என்றார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, “ஒரு மாநிலம் கடன் வாங்கி பொதுமக்களுக்கான பள்ளி, மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் போன்ற சொத்துகளை உருவாக்கினால் பொருளாதாரத்தில் நல்ல தாக்கம் ஏற்படும். நாட்டுக்கு ஜிடிபி என்றால், மாநிலத்துக்கு ஜிஎஸ்டிபி. ஒரு மாநிலம் ஜிஎஸ்டிபியில் 3 சதவீதம் அளவுக்கு கடன் வாங்கலாம்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply