தமிழக மக்கள் மீது முதல்வருக்கு அக்கறையில்லை: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

Priya
26 Views
1 Min Read

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆளுநர் உரை என்பது மாநில அரசு தயாரித்துக் கொடுக்கும் அறிக்கையைப் படிப்பதுதான்.

அதன் அடிப்படையிலேயே ஆளுநர் உரையாற்றியுள்ளார். தேசத்தின் நலன் மற்றும் ஒற்றுமைக்காக மாநில அரசு எடுக்கும் முடிவுகள் எப்போதும் வரவேற்கப்பட வேண்டியவைதான்.

மத்தியில் ஆட்சியில் இருந்த போதும் சரி, தற்போது கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் போதும் சரி, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தமிழக மக்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் காங்கிரஸ் துரோகம் இழைத்து வருகிறது. அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள சூழலில், கர்நாடகாவில் தமிழகத்துக்கு எதிராகச் செயல்படும் அதே காங்கிரஸுடன் விஜய் கைகோர்த்துள்ளார்.

இதன்மூலம் தமிழக மக்கள் மீது முதல்வர் விஜய்க்கு உண்மையான அக்கறை இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply