கரூர் துயரம்: கடினமான தருணத்தைக் கடந்து வருவோம் !அனுமதி கிடைத்ததும் நிச்சயமாக சந்திப்போம்! – தவெக தலைவர் விஜய் கடிதம்

கரூர் துயரம்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் குடும்ப நல நிதியை RTGS மூலம் வழங்கிய தமிழக வெற்றிக் கழகம்

Surya
99 Views
1 Min Read
Highlights
  • கரூர் பெருந்துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி
  • “இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம்” எனத் தவெக தலைவர் விஜய் அறிக்கை
  • சந்திப்புக்கான அனுமதி கிடைத்ததும் நிச்சயமாக நேரில் வருவேன் என உறுதி

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தவெக சார்பில் குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக  தவெக தலைவர் விஜய், தொண்டர்களுக்குகடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில்,என் நெஞ்சில் குடியிருக்கும் உங்களுக்கு வணக்கம்.

கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். இந்தச் சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சென்ற வாரம் உங்களுடனான நம் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள மேற்கொண்ட காணொளி அழைப்பில் நாம் சொன்னது போலவே, நமது சந்திப்பிற்காக, அதற்கான சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயமாகச் சந்திப்போம்.

இதனிடையே, நாம் ஏற்கனவே (28.9.2025 அன்று) அறிவித்தபடி குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சத்தை வங்கியின் RTGS வழியாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக (18.10.2025) அனுப்பி வைத்துள்ளோம். அதை நமது உதவிக் கரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம். என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply