தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் புதிய டைடல் பூங்காக்கள்

Priya
18 Views
1 Min Read

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று (ஜனவரி 20, 2026) ஆளுநர் ஆர்.என். ரவி ஆற்றிய உரையில் (சபாநாயகர் வாசித்தது), தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையை (IT) மாநிலம் முழுவதும் பரவலாக்கும் நோக்கில், மேலும் 14 மாவட்டங்களில் புதிய டைடல் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞரால் தொடங்கப்பட்ட டைடல் பூங்கா திட்டத்தின் தொடர்ச்சியாக, தற்போது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் ஐடி சேவைகளைக் கொண்டு செல்ல அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, மதுரை, திருச்சி, ஓசூர், காரைக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை, கரூர், உதகமண்டலம், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 14 இடங்களில் இந்தப் புதிய பூங்காக்கள் அமையவுள்ளன.

தமிழகத்தின் தற்போதைய தொழில் வளர்ச்சி குறித்து ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கியத் தரவுகள்:

  • மின்னணுவியல் ஏற்றுமதி: 2025-ம் ஆண்டில் மட்டும் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மின்னணுப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. தேசிய அளவிலான ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 41.2% ஆக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
  • முதலீடுகள்: கடந்த 5 ஆண்டுகளில் ரூ.12.16 லட்சம் கோடிக்கும் மேலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
  • வேலைவாய்ப்பு: 1,176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
  • நிறைவு பெற்றவை: பட்டாபிராம் (திருவள்ளூர்), தஞ்சாவூர், சேலம், விழுப்புரம், தூத்துக்குடி, வேலூர் மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் ஏற்கனவே மினி டைடல் பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன.
Share This Article
Leave a Comment

Leave a Reply