இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோவை, நீலகிரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.
மேலும் ,மன்னாள் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரிக்கடலில் இன்று சூறாவளிக்காற்று வீசும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.