➤ தங்களிடம் இருக்கும் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் குறித்து ஹமாஸ் வீடியோ வெளியிட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவ உதவிகளை உடனே வழங்குமாறு செஞ்சிலுவை சங்க அமைப்பைக் கேட்டுக்கொண்டார் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
➤ ஆனால், பிணைக்கைதிகளுக்கு உணவு வழங்க வேண்டும் என்றால், காஸாவில் அனைவருக்கும் உதவிகள் கிடைக்கும் வகையில் மூடப்பட்ட பகுதிகள் அனைத்தையும் திறக்க இஸ்ரேல் ஒப்புக்கொள்ள வேண்டும் என ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது.
➤ இந்நிலையில், ராணுவத்தின் உதவியால் பிணைக்கைதிகளை விடுவிக்க நெதன்யாகு உறுதியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
➤ இஸ்ரேலையும் பிணைக்கைதிகளையும் நெதன்யாகு பேரழிவுக்கு இட்டுச் செல்வதாகவும், ராணுவ நடவடிக்கை மூலம் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்கும் முயற்சி ஒரு மோசடி என்றும் பிணைக்கைதிகளின் குடும்பத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு தெரிவித்துள்ளது.