இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாசாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் வகையில், ‘ஸ்பிக் மெக்கே’ சர்வதேச மாநாடு சென்னை ஐ.ஐ.டி.யில் நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி ஆகியோர் பங்கேற்றார்கள்.

இந்நிலையில், ‘மேஸ்ட்ரோ இளையராஜா பெயரில் இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்’ தொடங்குவதற்கான சென்னை ஐ.ஐ.டி.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

நிகழ்ச்சியில் மாணவர்களிடையே இளையராஜா உரையாற்றியபோது,

இசையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன்.
ஆனால், வந்த நாளில் இருந்து, இந்நாள் வரை நான் இசையை கற்றுக்கொள்ளவில்லை. இசையை கற்றுக் கொள்வதற்காக வந்த
நான், இப்போது சென்னை ஐ.ஐ.டி. யில் இசை கற்றல் மையத்தை தொடங்கி உள்ளேன். ஒருவர் தண்ணீர்கேட்டால் அவருக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. அவருக்கு தாகத்தை ஏற்படுத்த வேண்டும். தாகம் அதிகரிக்க, அவரே தண்ணீரை தேடி கண்டுபிடிப்பார்.

அதேபோல் தான், படிப்பு மற்றும் வாழ்க்கையிலும் ஒவ்வொருவருக்கும் தாகம் இருக்கவேண்டும். அப்போது, எந்த இலக்காக இருந்தாலும் நாம் அடைய முடியும். நான் இசையில் சாதித்து விட்டதாக சொல்கிறார்கள். ஆனால், கிராமத்தில் இருந்து புறப்பட்டு வந்தபோது எப்படி இருந்தேனோ அதேபோல் தான் இப்போதும் இருக்கிறேன் என்று உணர்ச்சிவசமாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here