கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்தது. பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக கடந்த 1ம் தேதி தங்கம் விலை 2 முறை உயர்ந்து மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.62,320 என்ற புதிய உச்சத்தில் விற்பனையானது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.63,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை எட்டிப் பிடித்தது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.7,980-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here