AsianYouthGames2025: கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா, அபினேஷுக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை- முதல்வர், துணை முதல்வர் பாராட்டு!.

சமூகநீதி மண்ணின் பெருமை! ஆசிய இளையோர் போட்டியில் சாதித்த கபடி வீரர், வீராங்கனைக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

prime9logo
143 Views
1 Min Read
Highlights
  • ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடியில் தங்கம் வென்ற தமிழக வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ், கார்த்திகா ரமேஷ்.
  • இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் உயரிய ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
  • "எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது" என முதலமைச்சர் நெகிழ்ச்சி.

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

” பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.

கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, “உங்க ஏரியாவில் இப்ப பிரச்சினைகள் தீர்ந்திருக்கா?” என்று கார்த்திகாவிடம் கேட்டேன்.

கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார். கார்த்திகா அவர்களும் அபினேஷ் அவர்களும் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம்.

நேற்று நான் #BisonKaalamaadan-இல் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply