கரூர் துயரம்: பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினரை சென்னை வரவழைத்து சந்திக்கிறார் விஜய்!.

செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நாளை மகாலிபுரத்தில் விஜய் நேரில் சந்திக்கிறார்.

prime9logo
226 Views
1 Min Read
Highlights
  • கரூர் தவெக பொதுக்கூட்ட நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பங்களை விஜய் நேரில் சந்திக்கிறார்.
  • பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கரூரில் இருந்து ஆம்னி பேருந்துகள் மூலம் சென்னை மகாபலிபுரத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
  • நேரில் சந்திக்காமல், குடும்பங்களைச் சென்னைக்கு வரவழைக்கும் விஜய்யின் செயல் மீது அரசியல் கட்சிகள் விமர்சனம்.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி, தவெக நடத்திய பிரச்சார கூட்டத்தின் நெரிசலில் சிக்கி 41 பலியாகினர். இந்த நிகழ்விற்கு பிறகு  தவெக தலைவர் விஜய் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்து இருந்தார்.

மேலும்  கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு  தவெக சார்பில் ரூ.20 லட்சம் அவர்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. இருப்பினும்  தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில்  கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களை , கரூரில் இருந்து சென்னைக்கு வரவழைத்து நாளை மகாபலிபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லவிருக்கிறார்  தவெக தலைவர் விஜய்.இதற்காக ஆம்னி பேருந்துகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

பாதிக்கப்பட்ட மக்களை விஜய் விரைவில் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், தவெக தலைமையின் இந்த செயலை அரசியல் கட்சியினர்  விமர்சனம் செய்து வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply