இறால் பண்ணை, வேதித் தொழிற்சாலைகளில் அவசர ஆய்வு நடத்த வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

Priya
16 Views
2 Min Read

மாநிலத்​தில் உள்ள அனைத்து இறால் பண்​ணை​கள், கடல் உணவு பதப்​படுத்​தும் நிறு​வனங்​கள் மற்​றும் அபாயகர​மான வேதித் தொழிற்​சாலைகளைத் தமிழக அரசு உடனடி​யாக அவசர ஆய்​வுக்கு உட்​படுத்த தமிழ்​நாடு அறி​வியல் இயக்​கம் கோரிக்கை விடுத்​துள்​ளது.

இது தொடர்​பாக தமிழ்​நாடு அறி​வியல் இயக்​கத்​தின் மாநிலத் தலை​வர் திரு​நாவுக்​கரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் இயங்கி வரும் தனி​யார் கடல் உணவு பதப்​படுத்​தும் நிறு​வனத்​தில், ஜூன் 21-ம் தேதி ஏற்​பட்ட அமோனியா வாயுக் கசிவு காரண​மாக 7-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர்.

இந்​தச் சம்​பவம் மிகுந்த அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. கடல் உணவு​களை பதப்​படுத்​தத் தேவை​யான பனிக்​கட்​டிகளைத் தயாரிக்கஅமோனியா குளிர்​ப​தனப் பொருளாகப் பயன்​படுத்​தப்​படு​கிறது.

திரவ நிலை​யில் சேமிக்​கப்​படும் அமோனி​யாவை மைனஸ் 33.3 டிகிரி செல்​சி​யஸ் வெப்​ப நிலை​யில் பராமரிக்க வேண்​டும். இதற்​காகத் தொடர்ச்​சி​யான குளிர்​ப​தனச் சுழற்சி முறை​யும், சென்​சார்​களு​டன் கூடிய மூன்​றடுக்கு பாது​காப்பு எச்​சரிக்கை அமைப்​பும் கட்​டா​யம் இருக்க வேண்​டும்.

சுற்​றுச்சூழல் பாது​காப்​புச் சட்​டம் 1986-ன் ​படி, இந்த அமைப்​பு​கள் ஒவ்​வோர் ஆண்​டும் தணிக்கை செய்​யப்பட வேண்​டும். ஆனால் தற்​போது விபத்து நடந்த தொழிற்​சாலை​யில் இத்​தகைய எந்​தவொரு பாது​காப்பு விதி​முறை​களும் பின்​பற்​றப்​பட​வில்லை என்​பது வெளிப்​படை​யாகத் தெரி​கிறது.

எண்​ணூர் கோரமண்​டல் உர ஆலை விபத்​து, தொடர்ச்​சி​யான பட்​டாசு ஆலை விபத்​துகள் போன்​றவை அரசு கண்​காணிப்பு அமைப்​பு​களின் பலவீனத்​தையே காட்​டு​கின்​றன. எனவே கண்​காணிப்பு அமைப்பை வலுப்​படுத்​தும் வகை​யில் தமிழக அரசு சட்​டத்​திருத்​தத்​தைக் கொண்டு வர வேண்​டும்.

தொழிற்​சாலைக் கண்​காணிப்​புக் குழுக்​களில் அரசு அதி​காரி​களு​டன் சேர்த்​து, உள்​ளூர் மக்​கள், தமிழ்​நாடு அறி​வியல் இயக்​கம் போன்ற சுற்​றுச்​சூழல் அமைப்​பு​கள் மற்​றும் துறை​சார் வல்​லுநர்​களைப் பிர​தி​நி​தி​களாக இணைக்க வேண்​டும்.

பாது​காப்​புத் தணிக்கை ஆண்​டுக்கு ஒரு​முறை என்​ப​தற்​குப் பதிலாக, 6 மாதங்​களுக்கு ஒரு​முறை கட்​டாய​மாக்​கப்பட வேண்​டும். விதி​மீறல் இல்லை என்​ப​தற்​கான சான்​றிதழை அரசுடன் இணைந்து மக்​கள் பிர​தி​நி​தி​கள் குழு​வும் வழங்க வேண்​டும்.

தமிழகம் முழு​வதும் உள்ள இறால் பண்​ணை​கள் மற்​றும் வேதித் தொழிற்​சாலைகளில் உடனடி​யாக ஆய்வு நடத்​தப்பட வேண்​டும். தொழிற்​சங்​கங்​களு​டன் இணைந்து வெளி​மாநிலத் தொழிலா​ளர்​களுக்​காகப் பிரத்​யேக​மான கொள்​கைத் திட்​டங்​களை அரசு உரு​வாக்கி செயல்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply