அண்ணாமலை வாயைத் திறந்தாலே பொய் தான்: எஸ்.வி.சேகர் கடும் தாக்கு

Priya
219 Views
1 Min Read

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேர்மையில்லாதவர். விளம்பரத்திற்காக எதையும் செய்யக்கூடியவர். அவர் வாயைத் திறந்தாலே பொய் தான் பேசுவார். அதிமுகவின் வாக்குகளை பாஜக பெற்ற சமயத்தில், தன் தனிப்பட்ட செல்வாக்கால் தான் வாக்குகள் அதிகரித்தது என்று பொய் கூறி வருகிறார். மத நம்பிக்கையில் எந்த அரசியல் கட்சியும் தலையிடக்கூடாது. கடந்த 5 ஆண்டுகளில் 1 கோடியே 31 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுத்தது உள்ளிட்ட பல சாதனைகளை திமுக அரசு செய்துள்ளது.

தவெக ஆட்சியமைத்த பிறகும், திமுகவை தீய சக்தி என்று குறை கூறி வருவது தவறு. திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை, தன் பக்கம் வைத்துக் கொண்டு, விஜய் இவ்வாறு பேசக் கூடாது. அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள், தவறான செயல்களிலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் காரியங்களிலோ ஈடுபடாத வண்ணம் அவர்களை கண்காணிக்க வேண்டும். தவறு செய்யும் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply