வட மாநிலங்களில் குழந்தைகள் உயிரிழப்பு விவகாரம்: இருமல் மருந்து குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் முக்கிய விளக்கம்!

வடமாநிலக் குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமெனக் கூறப்பட்ட 'கோல்ட்ரிப் சிரப்'பில் ரசாயன கலப்படம் இல்லை என மத்திய அரசு விளக்கம்; 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்தைத் தவிர்க்க அறிவுறுத்தல்

prime9logo
974 Views
2 Min Read
Highlights
  • ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்தது குறித்த மத்திய அரசு விளக்கம்.
  • கோல்ட்ரிப் சிரப்' மாதிரிகளில் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடிய டை எத்திலின் கிளைக்கால் கலப்படம் இல்லை.
  • உயிரிழந்த ஒரு குழந்தைக்கு விலங்குகளால் பரவும் 'லெப்டோஸ்பிரோசிஸ்' நோய் பாதிப்பு இருந்தது உறுதி.
  • உயிரிழந்த ஒரு குழந்தைக்கு விலங்குகளால் பரவும் 'லெப்டோஸ்பிரோசிஸ்' நோய் பாதிப்பு இருந்தது உறுதி.

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய வடமாநிலங்களில் இருமல் மருந்து குடித்ததால், உடல் நலன் பாதிக்கப்பட்டு, 12 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. மேலும், ஐந்து குழந்தைகள் மகாராஷ்டிராவின் நாக்பூரில் சிறப்பு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது முக்கிய விளக்கத்தையும், பொதுமக்களுக்கான அறிவுரையையும் வழங்கியுள்ளது.

‘கோல்ட்ரிப் சிரப்’ மீதான குற்றச்சாட்டும் விசாரணையும்

சம்பவம் குறித்து மத்திய மருந்து தர கட்டுப்பாடு மைய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். குழந்தைகள் குடித்த குடிநீர், இருமல் மருந்து மாதிரிகள், டாக்டர்களின் பரிந்துரை கடிதம் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், குழந்தைகளின் உயிரிழப்புக்கு இருமல் மருந்தே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மருந்தைத் தயாரித்த காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மத்தியப் பிரதேச அரசு, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்திடம் கோரிக்கை வைத்தது. அதன் விளைவாக, ‘கோல்ட்ரிப் சிரப்’ இருமல் மருந்தை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய தடை விதித்து மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டது.

மத்திய அரசின் ஆய்வு முடிவுகள் மற்றும் விளக்கம்

இந்தச் சூழலில், மத்திய சுகாதார அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட ‘கோல்ட்ரிப் சிரப்’ மருந்து மாதிரிகளை ஆய்வு செய்ததில், சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடிய டை எத்திலின் கிளைக்கால் (Diethylene Glycol) போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனக் கலப்படம் இல்லை என்று முடிவுகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மருந்து குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்து அல்ல என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. உயிரிழந்த குழந்தைகளில் ஒருவருக்கு ‘லெப்டோஸ்பிரோசிஸ்’ (Leptospirosis) எனும் விலங்குகளால் பரவும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், குழந்தைகளின் உயிரிழப்புக்கு இருமல் மருந்தின் கலப்படம் நேரடி காரணம் அல்ல என்ற கோணத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

குழந்தைகளுக்கு மருந்து வழங்குவதில் முக்கிய அறிவுரை

இருமல் மருந்து உட்கொண்டதால் குழந்தைகள் இறந்ததாகக் கூறப்படும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு முக்கியமான அறிவுரையையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளைப் பரிந்துரைக்கவோ அல்லது வழங்கவோ கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகள் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுவதில்லை. அதற்கு மேற்பட்ட வயதினருக்கும் மருந்துகளைப் பயன்படுத்தும்போது, கவனமான மருத்துவ மதிப்பீட்டைப் பின்பற்றி, நெருக்கமான மேற்பார்வை மற்றும் பொருத்தமான அளவை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பல மருந்து சேர்க்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply