கடந்த சில மாதங்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கேரளாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதைதொடர்ந்து வயநாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 280 ஐ தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கேரளத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதைதொடர்ந்து தமிழ்நாடு கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் இந்த இரு மாநிலங்களில் சில இடங்களில் ஏழு முதல் 11 செமீ மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது