தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இன்று முழுமையாக விலகிய நிலையில்,தமிழ்நாடு, புதுச்சேரி -காரைக்கால், கடலோர ஆந்திரா ராயலசீமா, தெற்கு உட்புற கர்நாடகா மற்றும் கேரளா-மஹே ஆகிய இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிடக் கூடுதலாகப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.