உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின சமுதாயத்தை சார்ந்த ஸ்ரீபதிக்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் தன்னுடைய X தளத்தில் பாராட்டுக் கவிதை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள கவிதை:-

இரும்பைப் பொன்செய்யும்
இருட்கணம் எரிக்கும்

சனாதன பேதம்
சமன் செய்யும்

ஆதி அவமானம் அழிக்கும்

விலங்குகட்குச் சிறகுதரும்

அடிமைப் பெண்ணை
அரசியாக்கும்

விளக்குமாறு விளங்கிய கையில்
செங்கோல் வழங்கும்

கல்வியால் நேரும்
இவையென்று காட்டிய
பழங்குடிப் பவளமே ஸ்ரீபதி
உன் முறுக்கிய முயற்சியில்
இருக்கிற சமூகம்
பாடம் கற்கட்டும்

வளர்பிறை வாழ்த்து! என்று தன்னுடைய கவிதை மூலம் ஸ்ரீபதியை பாராட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here