மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறினார்

அதன்படி, “ஒரு நாடு – ஒரே தேர்தல்” திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, சந்திரயான்-4 திட்டத்தின் கீழ் இந்தியா மீண்டும் நிலவுக்குச் செல்லும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரயான்-3 திட்டத்தின் ஒரு பகுதியாக விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

அதன் தொடர்ச்சியாக, சந்திரயான்-4 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. சந்திரனில் தரையிறங்கி அங்கிருந்து மாதிரிகளை எடுத்து பூமிக்கு திரும்பும் வகையில் விண்வெளி ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு அடுத்த கட்டமாக ரூ.20,193 கோடி செலவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1,236 கோடி செலவில் சந்திரயான்-4 திட்டத்தின் விரிவாக்கமாக வீனஸை ஆராய்வதற்கான ஆர்பிட்டர் பணிக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2028ம் ஆண்டு மார்ச் மாதம் வீனஸ் விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • மேலும், இந்தியா சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் திட்டத்திற்கு ஏற்ப, சர்வதேச விண்வெளி மையத்தின் முதல் கட்ட கட்டுமான பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here