தமிழகத்தில் 88 மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு 58 மதிப்பெண்கள் போடப்பட்டுள்ளது.

சமீபத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தியதில் தவறு நடந்துள்ளது, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமிழ் மதிப்பெண் குறைவாக இருந்ததை உணர்ந்த மாணவன், மறுமதிப்பீட்டிற்கு பணம் கொடுத்து விடைத்தாள் நகலை பெற்றபோது அதிர்ச்சி அடைந்தார்.

மாணவி தமிழில் 88 மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் கவனக்குறைவாக 58 மதிப்பெண்கள் மட்டுமே கொடுத்தது தெரியவந்தது. அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து அந்த மாணவனுக்கு மறு கூட்டலுக்காக வாங்கப்பட்ட பணத்தை திருப்பி கொடுத்து சம்பந்தப்பட்ட பேப்பர் திருத்தி ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் தேர்வுத்துறையும், பள்ளிக் கல்வித்துறையும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here