தமிழகத்தில் கடந்த ஓராண்டில் யானைகளின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. தமிழக வனப்பகுதியில் தற்போது 3,063 யானைகள் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில், மே 23 முதல் 25 வரை யானைகள் 26 வன மாவட்டங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.இதில் 1836 வனத்துறை ஊழியர்கள், 342 தன்னார்வலர்கள் என, மொத்தம் 2178 பேர் ஈடுபட்டனர். இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் வாயிலாக, தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கையையும், வாழ்வியல் முறைகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை, நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இதுவரை யானைகள் பாதுகாப்புக்காக, தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால், யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 2023-ல் 2961 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, தற்போதைய கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 3063 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அகத்திய மலை யானைகள் காப்பகம், தமிழ்நாடு யானைகள் பாதுகாப்பு இயக்கம், யானைகள் வழித்தடங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற, அரசின் நடவடிக்கைகள், யானைகளின் எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here