பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் 14ஆம் தேதி துவங்கி அக்டோபர் 17 ( இன்று) வரை நடந்து முடிந்துள்ளது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கரூர் சம்பவம், ஆணவப்படுகொலை போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
கடைசி நாள் கூட்டத்தில் , முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணவப்படுகொலையை தடுக்க ஆணையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.