தந்தை பெரியாரின் சமூக புரட்சிகரமான செயல்பாடுகளை போற்றும் வகையில், திருச்சி – சிறுகனூரில் “பெரியார் உலகம்” அமையவுள்ளது.இதற்கு திமுக சார்பில்
சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ரூ. 1,70,20,000-ஐ திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் தள பதிவில்,
“தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்திட்ட தந்தை பெரியாரின் புகழ் சொல்லும் வகையில் திருச்சி – சிறுகனூரில் அமையும் “பெரியார் உலக”த்துக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ரூ. 1,70,20,000-ஐ தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினேன்!
பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்!” என தெரிவித்துள்ளார்.