18-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
இத்தேர்தலில் 797 பெண்கள் உட்பட மொத்தம் 8,360 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதல் மக்களவை தேர்தல் வேட்பாளர்களின் எண்ணிக்கையை விட இது நான்கு மடங்கு அதிகமாகும்.
1996 தேர்தலுக்குப் பிறகு 2009 தேர்தலில் வேட்பாளர்கள் எண்ணிக்கை முதல் முறையாக 8,000-த்தை கடந்தது. அதில் 8,070 வேட்பாளர்களும் 2014 தேர்தலில் 8,251 வேட்பாளர்களும் 2019 தேர்தலில் 8,039 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் மொத்தம் போட்டியிடும் 8,360 வேட்பாளர்களின் வேட்புமனு ஆய்வு செய்யப்பட்டதில் 8,337 வேட்பாளர்களில் 1,644 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக 1,188 பேர் மீது கொலை முயற்சி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அவதூறு பேச்சு உட்பட தீவிர குற்ற வழக்குகள் எதிர்கொண்டுள்ளனர்.
தேர்தலில் ஜனநாயகத்தை காக்கவும் மக்களுக்காக குரல் கொடுக்குகவும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். ஆனால் நிறுத்தப்படும் வேட்பாளர்களில் 20 சதவீதம் பேர் குற்றவாளிகளாக இருக்கும் பட்சத்தில் எப்படி ஜனநாயகமானது காக்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது