செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநரும், நடிகரும், அரசியல் பிரமுகருமான எஸ்.வி.சேகர், திமுக-விற்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும், அதற்காக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் “விஜய் இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை. சினிமா படப்பிடிப்பு போன்று ஆங்காங்கே குரூப் குரூப்பாகச் சென்று பேசுகிறார்.
234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவர் போட்டியிடப் போகிறார் என்றால், புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒண்ணும் செய்ய முடியாது. ஒருவேளை, தற்போதைய அரசியல் சூழல் அப்படியே நீடித்தால் திமுக நிச்சயமாக ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்தார்.