இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த பிப்.,2ம் தேதி வெளியிட்ட கட்சித் துவக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, கட்சித் தலைவர் விஜய், எங்களின் அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களை எங்களின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, 2026ல் நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் எங்கள் இலக்கு. எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது. ஜூலை 10ல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடாது; எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.