நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை கண்டித்து நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி மாநில தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, கவுரவ மதிப்பெண் வழங்கல் போன்ற முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பான வழக்குகள் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வு முறைகேடு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு மற்றும் முறைகேடுகளை கண்டித்து நாளை மறுநாள் (ஜூன் 21) அனைத்து மாநில தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here