உலகம் முழுவதும் 4ஜி தொழில்நுட்பம் பரவியதால், இந்தியாவும் அதை பின்பற்றியது. 5G அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​அது உலகம் முழுவதும் பயணித்தது. ஆனால், தொழில்நுட்ப புரட்சியால், 6ஜி தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில், உலக அளவில் இந்தியா முன்னணியில் இருக்கிறது என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

சென்னை ஐஐடி மாணவர்களிடையே அமைச்சர் சிந்தியா பேசுகையில்

மொபைல் போன்களில் 6ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்தியா உலகளாவிய முன்னோடியாக மாறும் எனஅமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நம்பிக்கை தெரிவித்து,
“இன்று இந்தியாவில் 117 மில்லியன் மொபைல் இணைப்புகள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25 கோடியாக இருந்த இணையதள இணைப்புகளின் விலை இன்று ரூ.97 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும், பாரத்நெட் திட்டத்தின் கீழ், நாட்டின் 2,46,000 கிராமப்புறங்களுக்கு இணைய இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த புரட்சிகரமான திட்டம் இந்தியாவை தொழில்நுட்ப மையமாக மாற்றும். 5ஜி தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும், இந்த தொழில்நுட்பத்தில் 98 சதவீதம் நகர்ப்புறங்களில் பரவியுள்ளது.என தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here