ஆன்மிக பூமி என்பதை நிரூபித்த பிரதமர் மோடி, தமிழகத்தின் குமரி முனையில் தியானம் செய்தார். இவரைப் பற்றி பல மீம்ஸ்கள் வருகின்றன. கேலி, கிண்டல் செய்வதைத் தவிர்க்கவும்.

கருத்துக் கணிப்புகளை விட தேர்தல் முடிவுகளில் பாஜக அதிக வெற்றி பெறும் என எதிர்பார்க்கிறோம். பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும், மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறார். தமிழகம் மின் மிகை மாநிலம் என்று முதல்வர்அறிக்கை வெளியிட்டார்.

நேற்று இரவு எனது வீட்டில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. வியாழக்கிழமை சாய்பாபா கோயிலுக்குச் சென்றபோது மின்சாரம் இல்லாமல் கோடம்பாக்கம் முழுவதும் இருளில் மூழ்கியது. திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு ஏற்படும். இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here