கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கத்தில் நீர் வரத்து அதிகமாகியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதை நிலவரம் குறித்து விசாரிக்கையில்,
24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 13.23 அடிக்கு தண்ணீர் உள்ளது. கொள்ளளவு கணக்கீட்டின் படி, 3645 மில்லியன் கன அடியில், 1223 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது

ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 260 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 134 கன அடியாக உள்ளது

ஏரியின் நீர் மட்டம் 23 அடியை எட்டும் போது பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்படும். தற்போது 13 அடி நீர் இருப்பதால், கனமழை தொடர்ந்தாலும் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.

ஏரியில் இருந்து அதிகளவில் நீர் திறக்கப்பட தற்போது எந்த வாய்ப்பும் இல்லை என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல். இதனால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here