கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் சிகிச்சை பெறும் 17 பேரில் 8 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 2 நாட்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் அருந்தியவருக்கும் இன்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படக்கூடாது. கள்ளச்சாராய விஷத்தை முறிக்கும், ‛ OMEPRAZOLE ‘ மருந்து கையிருப்பில் இல்லை என பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் பேசி உள்ளார். ஆனால், சிகிச்சைக்கு தேவையான அளவு 4.42 கோடி மருந்துகள் கையிருப்பில் உள்ளன. எதிர்க்கட்சி தலைவர் பொய்யான குற்றச்சாட்டை கூறியுளளார். அவரின் பேச்சு எரியும் நெருப்பில் குளிர்காய்வது போல் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here