தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப்-2, 2ஏ, நிலையில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. பட்டப்படிப்பு கல்வித்தகுதி கொண்ட இப்பணியிடங்களுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 962 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
குரூப் 2 தேர்வு எழுதும் பட்டதாரிகள், தேர்வு எழுதும் போது வீடியோ எடுக்க வருபவருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் நிலையில், இதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது, இதனை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.