அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 476 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு 2 லட்சத்து 32 ஆயிரம் இடங்கள் உள்ளன.

2024-25-ம் கல்வியாண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களில், தகுதியான 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இதன் முதற்கட்டமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

முதல் நாளான இன்று, மாணவர்கள் விருப்ப கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. இன்று இரவு 9 மணிக்கு, கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையும், நாளை மாலை 5 மணிக்குள் தற்காலிக ஒதுக்கீடு ஆணையை உறுதி செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, இறுதி ஒதுக்கீடு ஆணை அன்றைய தினம் இரவு 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தொடர்ந்து, வருகிற 25-ந் தேதி முதல் 28-ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. மேலும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 29-ந்தேதி தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here